Sunday, February 10, 2019

31 பேரின் குருதி மாதிரிகளில் போதைப்பொருள்

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக்குழு தலைவர் என கூறப்படும் மாகந்துரே மதூஷ் உள்ளிட்டவர்கள் இன்று டுபாய் நீதி மன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். இன்று நீதிமன்றத்தில் 40 பேரும் முன்னிலை படுத்தப்படவுள்ள நிலையில் சந்தேகநபர்களில் 31 பேரின் குருதி மாதிரிகளில் போதைப்பொருள் காணப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரத்தில் டுபாயில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்ககளில் இலங்கையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய முன்னணி போதைப்பொருள் கடத்தற்காரர்கள் ஐவர் அடங்குவதாக டுபாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர்களில் கஞ்சிப்பானை இம்ரான் எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com