Sunday, February 24, 2019

18 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தினால் அரச சேவைகள் அரசியல் மயப்படுத்தப்பட்டன - பிரதமர்

19 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டமாகும் என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புத்தளம் ஆனமடுவப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை நேற்று திறந்து வைத்ததன் பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். கட்சி வேறுபாடு இன்றி நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக நிறைவேற்றப்பட்டது 19 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

18 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தினால், சுயாதீன நிறுவனங்கள் அனைத்தும் செயலிழந்ததாக சுட்டிக்காட்டி பிரதமர் ரணில் விக்கிரம சிங்க, முக்கியமாக பொலிஸ் அரச சேவை என்பன அரசியல் மயப்படுத்தப்பட்டதாகவும் கூறினார். இந்த நிலையில்தான் நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த 19ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் தேவையின் முக்கியத்துவத்தை உணர முடிந்தது என்று பிரதமர் தெரிவித்தார்.

இவற்றின் காரணமாக பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் 19 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்ததாகவும் பிரதமர் கூறினார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com