Sunday, February 24, 2019

மாகாண சபை தேர்தல் குறித்து விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

மாகாண சபை தேர்தல் குறித்து விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரஸ்ரீ குறிப்பிட்டுள்ளார். இந்த கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது, மாகாண சபை தேர்தல் இடம்பெறும் தினம் குறித்து தீர்மானிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன்படி இந்தக் கூட்டம் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

அதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்குள்ள பிரச்சினைகள் மற்றும் பழைய முறையில் விரைவில் நடத்துவது குறித்தும் ஆராயப்படவுள்ளது.

இந்த கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய ஆகியோர் கலந்துகொள்வதற்கான இணக்கபாடு, கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com