Thursday, January 17, 2019

கைதிகள் சிலரைத்தாக்கிய CCTV காணொளி - ஆராய விசேட குழு

கடந்த வருடம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள், கைதிகள் சிலரைத்தாக்கிய CCTV காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்ப்பனான அனைத்து காட்சிகளையும் தாம் உள்ளிட்ட குழுவினர் பார்வையிடவுள்ளதாக, விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய குழுவின் தலைவர், சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல் தெனிய குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த காணொளியை முழுமையாக பார்வையிட்டதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகளை சித்திரவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் அறிக்கை ஒன்றை சமர்பிக்கும்படி கோரியிருந்தார்.

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குள், சிறைச்சாலை அதிகாரிகளால் கைதிகளை நிலத்தில் முழந்தாழிடச் செய்து சித்திரவதைக்குள்ளாக்கிய CCTV காணொளி வௌியாகியுள்ளதை அடுத்து இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com