Thursday, January 17, 2019

நாளை முதல் புதிய இடத்தில் இயங்கும் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு

நாளை முதல் ஜனாதிபதி நிதியம் புதிய இடத்தில் செயல்படும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதுவரை இலக்கம் 41, ரேணுகா கட்டிடம், ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01 என்ற முகவரியில் இயங்கிவரும் ஜனாதிபதி நிதியமானது, நாளை ஜனவரி 18 ம் திகதி முதல் புதிய முகவரியில் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.

அதற்கமைய, இலக்கம் 35, மூன்றாம் மாடி, லேக்ஹவுஸ் கட்டிடம், டி.ஆர்.விஜயவர்தன மாவத்தை, கொழும்பு – 10 என்ற முகவரியில் ஜனாதிபதி நிதியம் புதிய கட்டிடத்தில் செயல்படும். விரிவான, வினைத்திறனான மக்கள் சேவையை வழங்குவதற்காகவும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வருகைதரும் மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தித்தரும் நியக்கத்தில் ஜனாதிபதி நிதியத்தை புதிய இடத்தில் இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த இடமாற்றத்தினால் நாளை 2019.01.18ஆம் திகதி சேவைகளை பெற்றுக்கொள்ள வருகை தரும் மக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் தொடர்பிலும் வருத்தம் தெரிவிக்கப்படுகிறது. மேலும் எதிர்வரும் 2019.01.21ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வழமைபோல் ஜனாதிபதி நிதியத்தின் சேவை வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறும். நிதியத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய வழமைபோன்று 011-2331245, 011-2431610, 011-2382316 என்ற இலக்கங்களினூடாக ஜனாதிபதி நிதியத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com