Thursday, January 31, 2019

தகுதியில்லாதவருக்கு நியமனம் - தொடரும் சுங்க அதிகாரிகள் போராட்டம்

இலங்கை சுங்கப் பிரிவின் மேற்கொண்டிருந்த சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் தொடரும் என சுங்க அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.

சுங்கப் பணிப்பாளர் நாயகமாக இலங்கை சுங்க சேவையிலே அல்லது அரச நிர்வாக சேவை தகுதியோ இல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே நேற்று இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசாங்கம் எடுத்துள்ள இந்த தீர்மானத்தை மாற்றும் வரையில் தொடர்ந்து பேராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் விபுல மினுவன்பிட்டிய மேலும் கூறியுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான பொதிசேவை மற்றும் ஏற்றுமதி சேவை தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளில் இருந்தும் சுங்க ஊழியர்கள் விலகியுள்ளனர்.

ஓய்வுபெற்ற ரியல் அட்மிரல் கலாநிதி ஷமால் பெர்னாண்டோவை சுங்க பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமிக்க அமைச்சரவை நேற்று முன்தினம் அனுமதி வழங்கியிருந்த நிலையிலேயே குறித்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com