Thursday, January 31, 2019

அமெரிக்கா கொண்டு செல்லப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான அறிக்கை பெப்ரவரியில்.

எழும்புக்கூடுகளின் மாதிரிகள் தொடர்பாக புளோரிடாவில் மேற்கொள்ளப்படும் காபன் பரிசோதனை அறிக்கை, பெப்ரவரி மாதம் 3ஆம் வாரமளவில் மன்னார் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக காணமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மன்னார் சதொச வளாகத்தன் புதை குழியில் இருந்து அண்மையில் மீட்டேடுத்த 6 மனித எச்சங்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக அமெரிக்காவின் புளோரிடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் குறித்த மனித எச்சங்களின் மாதிரிகள் கதிரியக்க காபன் பரிசோதனை ஊடாக கால நிர்ணயம் செய்யப்படவுள்ளன. இந்த பண்களை அமெரிக்காவின் பீட்டா நிறுவனம் மேற்கொள்கின்றது.

பீட்டா வழங்கும் அறிக்கையின் பிரகாரம் குறித்த மனிதப் படுகொலைகள் எந்த காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டவை என்பதை அறிய முடியுமென அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுவரையில் 300 மனித எச்சங்கள் மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் 27 எச்சங்கள் சிறுவர்களின் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப்பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷவினால் தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கை ஒன்றும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com