Wednesday, January 9, 2019

சம்பள உயர்வு இல்லை - நவீன், ஒருவாரத்தில் தீர்வு - கமகே

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க முடியாது என்று நேற்றை நாடாளுமன்ற அமர்வில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சபை ஒத்தி வைப்புவேளை பிரேரணையை தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் M திலகராஜ் முன்வைத்த போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அண்மைய நாட்களில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை 1000 ரூபாவாக உயர்த்த வேண்டும் என்ற வலியுத்தல், விடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் முறையான அழுத்தம் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பபடுகின்றன. இந்த நிலையில், அமைச்சர் நவீன் திஸாநாயக்க 1000 ரூபா சம்பள விடயத்தில் அதிகரிப்பு இல்லை என்ற நிலைப்பாட்டில் கருத்து தெரிவித்ததுடன் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறினார், ஆனால் ஒரு வாரகாலத்தில் தீர்வு வழங்கப்படும் என்று தொழித்துறை அமைச்சர் தயா கமகே கருத்து வெளியிட்டுள்ளார்.

எவ்வாறு இருப்பினும் 2 வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும் என்று கூறப்பட்ட கூட்டு ஒப்பந்தம், எந்த காலத்திலும் புதுபிக்கப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் குற்றம் சுமத்தியுள்ளார். தொழிலார் கொங்கிரஸ் இந்த விடயம் தொடர்பில் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் மௌனம் காத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com