Wednesday, January 9, 2019

மனித உரிமை மீறல் என்பது சாதாரண விடயம் - சாதாரணமாக கூறினார் அருந்திக்க

யுத்தத்தின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவது சாதாரண ஒரு விடயம் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான அருந்திக்க பெர்னான்டோ நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்திற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு நேற்று பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்படி தெரிவித்தார். நாம் அமெரிக்காவிற்கோ சர்வதேசதிற்கோ பயந்து வெளிநாட்டுக் கொள்கைகளை தயாரிக்கவில்லை. நாம் 30 வருடங்கள் யுத்தத்தினால் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி இருந்தோம். இன்று மனித உரிமை தொடர்பில் பேசும் எந்தவொரு நாடும் அன்று எமக்கு உதவவில்லை.

உலகிலேயே பயங்கரமான அமைப்புடன் தான் நாம் போரிட்டோம். இவ்வாறான அமைப்புடன் யுத்தம் செய்யும்போது, மனித உரிமை மீறப்படும். மனித உரிமை மீறப்படாமல், இவ்வாறான ஒரு பயங்கரவாத அமைப்புடன் எம்மால் போரிட முடியாது, இந்த விடயம் அனைவருக்கும் தெரியும். ஆனால், மனித உரிமைகள் தொடர்பில் அதிக கரிசனை எடுக்கும் அரசாங்கம், உலகிலேயே அதிகமாக மனித உரிமை மீறல்கள் நடைபெறும் அமெரிக்காவுடன்தான் இணைந்து தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னான்டோ குற்றம் சுமத்தினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com