Thursday, January 10, 2019

இன்று நள்ளிரவு முதல் விலை குறைப்பு மேற்கொள்ளப்படும் - அரசாங்கம்.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லீட்டருக்கு 2 ரூபாவால் குறைக்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையில் திருந்தங்களை மேற்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கும் குழு, அமைச்சர் மங்கள சமரவீரவின் .தலைமையில் இன்று மாலை கூடிய போதே, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அரசனாகி தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் விலை நிர்ணயத்தின் கீழ் மாதத்தின் ஒவ்வொரு 10 ஆவது நாளிலும் எரிபொருள் விலைகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

அந்தவகையில் ஒக்டேன் 95 ரக பெற்றோல், ஒக்டேன் 95, ஓட்டோ டீசல் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், சுப்பர் டீசல் 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாளை முதல் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 123 ஆகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 142 ஆகவும், ஓட்டோ டீசலின் விலை 99 ரூபாயாகவும், சுப்பர் டீசல் விலை 118 ரூபாயாகவும் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று நள்ளிரவு முதல் விலைகள் குறைக்கப்பட்டாலும், சர்வதேச எண்ணெய் விலைகள் ஜனவரி இரண்டாம் வாரத்தில் இருந்து தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com