Thursday, January 10, 2019

ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதியே - அறிவித்தார் நிமால்

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நிமால் சிறிபால டி சில்வா இன்று ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இம்முறையும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பெயரிடப்பட்டிருப்பதாக அவர் அறிவித்தார்.

இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்றும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நிமால் சிறிபால டி சில்வா, கட்சியின் யோசனை மைத்திரிபால சிறிசேனவே பொது வேட்பாளர் என்ற ஒருமித்த முடிவில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அன்று இருந்த பலம் அதேபோன்று இன்றும் இருப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 08ம் திகதிக்கு முன்னர் இடம்பெற வேண்டும் என்றும், ஒக்டோபர் இறுதியாகும் போது வேட்புமனு பொறுப்பேற்றகப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா இதன்போது மேலும் குறிப்பிட்டார்.

எப்படி இருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனி தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கப்போவது இல்லை என்று ஆரம்பத்தில் தெரிவித்திருந்தமை நினைவு கூறத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com