Thursday, January 17, 2019

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவித்தல்

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடாத்துவதற்கு பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு வலியுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 11ஆம் திகதி அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதன்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களும் குறித்த கோரிக்கை கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கான 4 வழிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த மாற்று யோசனைகளை அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பாராளுமன்றம் செயற்படவேண்டிய அவசியம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, மாகாணசபைத் தேர்தலை விருப்புவாக்கு முறையில் நடாத்துதல், கலப்பு முறையில் நடாத்துதல் என்பன தொடர்பான கொள்கைகளை வகுப்பது குறித்து, நாட்டின் தலைவர் மற்றும் பிரதமர் இவர்களோடு கட்சிகளின் தலைவர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தற்போது நீடிக்கும் குழப்ப நிலையில் மாகாணசபைத் தேர்தலை முதலில் நடத்துவதே சிறந்தது என்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com