Thursday, January 17, 2019

யாப்புக்கு வந்தது ஆப்பு

புதிய அரசியலமைப்பொன்றை கொண்டுவர வேண்டுமாயின், மகா சங்கத்தினரின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெற வேண்டும் என்றும், அவ்வாறு ஆசீர்வாதம் கிடைக்கப்பெறாத யாப்பை பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டாம் என்றும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பௌத்த சாசனத்திற்கான பணிக்குழுச்சபை இந்த விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.

பௌத்த சாசனத்திற்கான பணிக்குழு சபையின் தலைவர் திவியாகஹ யஸஸ்ஸி தேரர் உள்ளிட்ட முக்கிய தேரர்கள் பலர், இந்த அறிவித்தலில் கையொப்பம் இட்டுள்ளனர். மேலும், மகா சங்கத்தினரின் பிரதிநிதித்துவத்துடன் அரசியலமைப்பு சபையொன்றிடம் அந்தப் பணியை ஒப்படைக்குமாறும் அச்சபை கேட்டுக்கொண்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com