நீதிக்கான பெண்கள் அமைப்பின் தலைவர் சாவித்ரி குணசேகர எச்சரிக்கை
 அரசாங்கம், முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த  வேண்டும், அதன்  பின்னரே ஏனைய விடயங்களுக்கு  முக்கியத்துவம்  கொடுக்க  வேண்டும்.  அதனை விடுத்து தேர்தலை பிற்போட முயற்சித்தால் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை  முன்னெடுப்போம் என்று நீதிக்கான  பெண்கள்  அமைப்பின்  தலைவர்  சாவித்ரி  குணசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று  இடம்பெற்ற  ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்துகொண்டு  கருத்துரைக்கும்போதே  அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கம், முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த  வேண்டும், அதன்  பின்னரே ஏனைய விடயங்களுக்கு  முக்கியத்துவம்  கொடுக்க  வேண்டும்.  அதனை விடுத்து தேர்தலை பிற்போட முயற்சித்தால் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை  முன்னெடுப்போம் என்று நீதிக்கான  பெண்கள்  அமைப்பின்  தலைவர்  சாவித்ரி  குணசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று  இடம்பெற்ற  ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்துகொண்டு  கருத்துரைக்கும்போதே  அவர் இதனை தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு  ஒட்டுமொத்த   மக்களையும்  ஏமாற்றும் ஒரு  செயற்பாடாகவே  கருதப்படுகின்றது. மாகாண சபை  தேர்தலை   இவ்வருடத்தில்  நடத்தாமல்  தொடர்ந்து  பிற்போடுவதற்காகவே  அரசாங்கம் புதிய  அரசியலமைப்பினை   உருவாக்க  முயற்சிப்பதாக  அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அத்தோடு, மாகாணசபை தேர்தலை புதிய முறையில்  நடத்துவது சாத்திமில்லையென்றால், பழைய தேர்தல் முறையில் நடத்தவேண்டும்.  
அதன்படி பழைய தேர்தல் முறையில் தேர்தல் நடைபெறும் பட்சத்தில், புதிய தேர்தல் முறையில் அறிமுகம் செய்யப்பட்ட 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை பழைய தேர்தல் முறையினுள் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தமது அமைப்பு சார்பான வலியுறுத்தலை விடுத்துள்ளார். 
    
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
0 comments :
Post a Comment