Tuesday, January 29, 2019

நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு அமரிக்கா தயார்

இலங்கையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான உதவிகளை வழங்க தமது அரசாங்கம் எப்போதும் தயாராகவே உள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தேசிய சமயங்களுக்கான மாநாடு இடம்பெற்றபோது மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக தேசிய நல்லிணக்க, அரச கரும மொழிகள் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன், தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் யொஹான் பெரேரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com