மாலியில் பணியாற்றிய, இலங்கை இராணுவ வீரர்கள் இருவர் மரணம் - இலங்கை இராணுவம்.
மாலியில் பணியாற்றிய இலங்கை இராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் பணியாற்றிய இலங்கை இராணுவ வீரர்கள் இருவரே உயிரிழந்துள்ளதாக, இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
அதி சக்தி வாய்ந்த வெடிபொருள் ஒன்று வெடிதத்தனால், இந்த அனர்த்தம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் மேலும் மூன்று இலங்கை வீரர்கள் காயமடைந்துள்ளதாக, இலங்கை இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலி நாட்டின் டொவ்ன்ஸா பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவ வாகனமே, இந்த அனர்தத்தில் சிக்கியுள்ளது.
மாலி நேரப்படி இன்று காலை 6.30 அளவில் இந்த பாரிய விபத்துச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக இலங்கை இராணுவத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment