Monday, January 21, 2019

தமிழர்களின் எண்ணிக்கை அரசியலில் குறைந்து விட்டது - லிங்கநாதன்.

அரசியலில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக, முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் கவலை வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, லிங்கநாதன் இதனை கூறினார். அரசியல் வரலாற்றில் 60 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் முக்கிய பதவிகளை வகித்தவர்கள், தமிழர்களே என்பதாகி வரலாறு கூறுகிறது. எனினும் தற்பொழுது விரல் விட்டு எண்ணுமளவிற்கு தமிழர்களின் எண்ணிக்கை அரசியலில் குறைந்து விட்டது.

இந்த நாட்டில் தமிழர்கள் தலை நிமிர வேண்டுமென்றால், அதற்கு ஒரே வழி கல்வி மட்டுமே என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் லிங்கநாதன் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ளடங்காத பிரதேசங்களை ஏதொவொரு மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்த லிங்கநாதன், அதன் மூலம் அந்த பகுதியிலுள்ள மக்கள், அனைத்து வளங்களையும் பெற சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com