Monday, January 21, 2019

ராணுவம் வசமிருந்த 1201 ஏக்கர் காணி விடுவிப்பு - ஜனாதிபதி ஊடகப்பிரிவு.

இன்றைய தினம், வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில், 1201 ஏக்கர் காணிகள் விடுக்கப்பட்டுள்ளதாக, ,ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

முல்லைத்தீவில் இதற்கான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது. இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் 972 ஏக்கர் அரச காணிகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 120 ஏக்கர் அரச காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் 46.11 அரச காணிகளும் 63.77 தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கில் இன்னும் 14,000 ஏக்கர் காணிகள் படையினர் வசமுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, பொதுமக்கள் தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும், சிறிது சிறிதாக தமது வசமுள்ள காணிகளை விடுவித்து வரும் இலங்கை இராணுவம், தேசிய பாதுகாப்பு கருதி சில காணிகளை விடுவிக்காது, தமது பொறுப்பிலேயே வைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com