Sunday, January 13, 2019

சங்காவிற்கும் ராஜிதவிற்குமான சந்திப்பு ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலானதா ? சந்தேகம் கொள்ளும் அரசியல் அவதானிகள்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவிற்கும் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கும் இடையில் கடந்த வாரம் நடைபெற்ற சந்திப்பு, தேர்தலை இலக்கு வைத்து நடத்தப்பட்டதா? என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பில் பெரிதாக தகவல்கள் வெளியாகாத நிலையில், இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 4 ஆம் திகதி சுமார் 2 மணித்தியாலங்கள் அளவில் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், மக்களுக்கு தேவையான சுகாதார நடவடிக்கை தொடர்பிலேயே இருவரின் கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைச்சில் இருந்தவர்களிடம் அமைச்சர் ராஜித தெரிவித்ததாகவும் அந்தச் சிங்கள ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

ஆனாலும் இந்த சந்திப்பு தொடர்பில் அரசியல் அவதானிகள் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்தே இருவருக்குமான சந்திப்பு முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com