Sunday, January 13, 2019

எதிர்க்கட்சி தலைவர் மாறி மாறி பேசுகிறார் - அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் விமர்சனம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் கூறும் கருத்துக்களும், விகாரையில் கூறும் கருத்துக்களும் முற்றிலும் மாறுபட்டவை என்று தபால் மற்றும் முஸ்லிம் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

கண்டி மாவில்மட பிரதேசத்தில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அலுவலகத்தில் நேற்றைய நாளில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். பாராளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக கூடிய சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாகவும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமையும் வழங்கி செயற்படுவதாக மிகவும் தௌிவாக கூறியிருந்தார். இதன்போது கருத்துரைத்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்குமாறும், மதங்களுக்கு இடையில் பேதம் ஏற்படும் வகையில் செயற்பட கூடாது என்றும் கூறினார்.

அதற்கு பிரதமர் உடன்பட்ட நிலையில் பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச கூறுவது போன்று, அவர் மத நிகழ்வுகளில் ஈடுபடும்போதும் நடந்துகொண்டால் நாட்டுக்கு மேலும் பலன் கிடைக்கும் என்றும் அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com