Monday, January 7, 2019

வட மாகாண ஆளுநராக பேராசிரியர் கலாநிதி சுரேன் ராகவன்.

வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

03 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று பதவியேற்றுள்ளனர். அதன்படி வட மாகாண ஆளுநராக சுரேன் ராகவன் பதவியேற்றுக் கொண்டார். கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளராக சுரன் ராகவன் பணியாற்றிய நிலையில், தற்போது வட மாகாணத்திற்கான ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார்.

இவர் ஆசியாவில் முதன்முறையாக ஜேம்ஸ் மெடிசன் நம்பிக்கை புலமைப் பரிசிலை இரண்டு தடவைகள் பெற்றார். 2005 ஆம் ஆண்டு கென்ட் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் MA பட்டம் பெற்ற இவர் 2008ஆம் ஆண்டு PHD முடித்தார். பின்னர் 2008-2011களில் பிரித்தானிய அரசாங்கத்தின் புலமைப்பரிசிலும் சுரேன் ராகவனுக்கு வழங்கப்பட்டது.

கனடா – ஒன்றாரியோ பல்கலைக்கழகத்தின் OSAP விருதினை வென்ற இவர், நேரடி அரசியலில் பெரும் அனுபவசாலியாவார். அத்துடன் இவர் ஒட்டாவா சென் போல் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

பௌத்த சிந்தனைவாதியான இவர், பௌத்த துறவிகளுக்கும், யுத்தத்துக்குமான இடைத்தொடர்புகள் குறித்த இரண்டு புத்தகங்களையும், ஏனைய சில புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

இவரது அரசியல் தொடர்பான பல்வேறு ஆய்வுகள், பல முன்னணி பல்கலைக்கழகங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை நினைவூட்டத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com