Thursday, January 10, 2019

மண்டைதீவு கிணற்றில் எலும்புக்கூடு- விசாரணை எடுக்கப்படுமா?

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கிணறுகள் இரண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் எழுத்து மூலம் அறிவித்தால், காணாமல் போனோர் அலுவலகத்தின் ஊடாக விசாரணைகளை ஆரம்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
சிறிதரன் இந்த விடயம் தொடர்பில் அறிவிக்க, நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் மேற்கண்டவாறு பதில் வழங்கினார்.

தமது அமைச்சின் கீழ் செயற்படும் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு உரிய தகவல் வழங்கப்படுமாக இருந்தால் இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என்றும் மனோகணேசன் கூறினார். இதற்கு பதில் வழங்கிய சிறிதரன், குறித்த விபரங்களை அமைச்சுக்கு வழங்குவதாக வாக்குறுதி வழங்கினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com