Wednesday, January 16, 2019

போராட்டத்தின் பெயரால் தனிநபர்கள் கையடக்கியுள்ள மக்கள் சொத்துக்களை மீட்க வாரீர். வீ. ராமராஜ்

தமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரால் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் முழு அர்ப்பணிப்புடன் உதவிகளை செய்துள்ளனர். தமிழ் மக்கள் வாழும் நாடுகள் எங்கும் போராட்டத்திற்கு என மக்கள் பணம் வழங்கியுள்ளனர். உலகிலே பல சமூகங்கள் ஒடுக்கப்பட்டு புலம்பெயர்ந்துள்ளனர். ஆனால் தமிழ் மக்கள் தங்களுடைய விடுதலைக்காக புலம்பெயர் தேசங்களில் மேற்கொண்ட அர்ப்பணிப்புக்கள் போல் எந்த நாட்டு மக்களும் மேற்கொள்ளவில்லை என்ற பெருமைக்குரியவர்களாகவே எம் மக்கள் உள்ளனர். மக்களுடைய மேற்படி அர்ப்பணிப்புக்களை, தியாகங்களை புலிகளின் தலைமை விழலுக்கிறைத்த நீராக்கியமை யாவரும் அறித்தது.

இங்குள்ள துரதிஷ்டம் யாதெனில் எந்த மக்களின் விடுதலைக்காக புலம்பெயர்ந்த மக்கள் பணத்தை வாரி இறைத்தார்களோ அந்த மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு தலைமை அழிந்துபோக, புலிப்பினாமிகள் மக்களின் சொத்துக்களை முற்றாக கையகப்படுத்தியுள்ளனர்.

அவ்வாறு சுருட்டப்பட்டுள்ள பணத்தை மீட்பதற்கு அந்தந்த நாட்டிலுள்ள எமது மக்கள் முன்வரவேண்டும். போராட்டம் வழிதவறிப்போனபோது தட்டிக்கேட்பதற்கு மக்களாகிய நாம் அஞ்சி நின்றதன் விளைவே இன்று எமது போராட்டம் தோற்றதற்கு பிரதான காரணமாகும். அவ்வாறு நாம் தொடர்ந்தும் மௌனம் காப்போமாக இருந்தால் குறித்த பேர்வழிகளால் பதுக்கப்பட்டுள்ள எந்த சொத்தும் மக்களை சென்றடையப்போவதில்லை.

எனவே இன்று தாயகத்தில் துயரப்படும் மக்களின் துன்பங்களுக்கு தீர்வு காணப்படவேண்டுமாயின் இங்கு போராட்டத்தின் பெயரால் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் யாவும் அந்த மக்களை சென்றடைய வேண்டும். எனவே அந்த சொத்துக்களை மீட்க தமிழ் மக்கள் வியூகங்களை வகுத்து செயலில் இறங்கவேண்டும்.

இதற்காக அந்தந்த நாடுகளில் வாழ்கின்ற புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள், சட்ட நிறுவனங்கள், பத்திரிக்கையாளர்கள் என்போர் கூட்டாக இணைந்து, இச்சொத்துக்கள் மக்கள் சொத்து என்பதற்கான ஆதாரங்களை திரட்டி அவற்றை பறிமுதல் செய்து அவை தாயகத்து மக்களை சென்றடைய ஆவன செய்யவேண்டும்.

அந்த வரிசையில் கனடாவில் மக்களின் சொத்துக்களை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ள குழுவொன்ற மக்களின் சொத்துக்களையும் அதனை பதுக்கி வைத்துள்ளவர்களின் விபரங்களையும் வெளியிட்டுள்ளது.

அவ்விபரங்களை மக்களின் பார்வைக்காக கீழே இணைப்பதுடன் சகல நாடுகளிலுமுள்ள மக்களின் சொத்துவிபரங்களையும் அதனை பதுக்கியுள்ளோரது விபரங்களையும் அந்தந்த நாட்டிலுள்ள மக்கள் இணைந்து வெளியே கொண்டுவரவேண்டும் என நட்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் தங்களிடம் இருக்கக்கூடிய மேற்படி விடயம் சம்பந்தமான விபரங்களை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகின்றேன்.
தொலைபேசி இலக்கம் 00447817063682
அல்லது மின்னஞ்சல் vramaraj@hotmail.com


இறுதிகட்ட நிதி சேகரிப்பும் இருட்டடிக்கப்பட்ட உண்மைகளும் - விழிப்புக்குழுவின் வெளிச்ச அறிக்கை - கனடா

2008 நடுப்பகுதிவரை 14 ஆயுதக்கப்பல்கள் காட்டிக்கொடுப்பின் ஊடாக கடலில் அழிக்கப்படுகிறது

2008 October KP மீண்டும் காலச்சூழ்நிலை காரணமாக புலம்பெயர் கட்டமைப்புக்களுக்குள் உள்வாங்கப்படுகின்றார்

அதேகாலப்பகுதியில் தாயகத்தில் இனவழிப்பின் உச்சம் நடைபெறுகின்றது

குழப்பத்தின் உச்சத்தில் புலம்பெயர் தேசத்தில் தொண்டர்களும் மக்களும்

January 6,2009 KP யிடம் இருந்து 56 மில்லியனுக்கான அவசர தேவைக்கு உத்தரவு வருகின்றது ( 4 கப்பல் 2 Helicopter)

புலம்பெயர் தேசத்தில் நிதி சேகரிப்பதில் நெருக்கடி ஏற்படுகிறது

தொண்டர்கள் கடனடிப்படையில் மக்களிடமும் தங்களது பணமும் வழங்குகிறார்கள்

துரதிஸ்டம் சேகரிக்கப்பட்ட பணம் 10% வீதத்தை தாண்டவில்லை

மாற்றுவழி ஆராயப்படுகிறது

முடிவு தேசியத்தின் சொத்துக்கள் விற்று அல்லது கடனடிப்படையில் நிதிக்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது

சொத்து நிர்வாகம் அரசியல்துறை , உளவுத்துறை , கடற்துறை , அனைத்துலகம் ஆகிய 4 துறைகள் மூலம் நிர்வகிக்கபட்டது

இங்குதான் தேசியத்திற்கும் , புலம்பெயர் மக்களுக்கும் , தொண்டர்களுக்கும் ரெஜி அண்ணாவின் மேற்பார்வையில் KP யின் ஆதரவோடு சதிவலைகள் ஆரம்பமாகின்றது

அனைத்துலகத்தின் கனடா சொத்து விபரங்கள் முதலில் பார்ப்போம்

1. உலகத்தமிழர் கட்டிடம் - 1.5 மில்லியன் , உரிமை-உதயன்
இறுதி நேரம் வழங்கிய நிதி பூச்சியம்

2. சுரபி கட்டிடம் மற்றும் காணி -8 மில்லியன் , வியாபாரம் மற்றும் கையிருப்பு 3.27000 , உரிமை - ஆதி கணபதி , இராஐரட்ணம்,நையினை ரஞ்ஐன் என்று அழைக்கப்படும் சுரபி ரஞ்ஐன்
இறுதி நேரம் வழங்கிய நிதி பூச்சியம்

3. தொடர் pizza நிறுவனம் 6 கடை 1.2 மில்லியன் , தொடர்கடைக்கான மாத உரிமைபணம் 6 தரம் 600
உரிமை - தேசியத்தால் நீக்கப்பட்ட ரெஜி மற்றும் நண்பர்கள்

இறுதி நேரம் வழங்கிய நிதி ஆயிரத்து ஐம்பது மட்டும்

4. Fm Radio 14 மில்லியன் உரிமை - அன்ரனி குடும்பம்

இறுதி நேரம் வழங்கிய நிதி 20.000 மட்டும்

5. Coin laundry தொடர் (3 கடை)

6.27500 உரிமை - தேனிக்காம்ப் PLOT கண்ணன் என்று அழைக்கப்படும் மாதகல் கண்ணன்
இறுதி நேரம் வழங்கிய நிதி 2000 அதுவும் கடன்

6. மிசிசாகா printing அச்சகம் 7.5 மில்லியன் , உரிமை - ராஜா , சுரேன் முன்னால் TGTE

இறுதி நேரம் வழங்கிய நிதி 50.000 மட்டும்

7. கோயில் வீடு , ஈழமுரசு அலுவலகம் , மற்றும் New Market வீடு (4+22.000+6) 10,22000
உரிமை - ஈழமுரசு தவம்

இறுதி நேரம் வழங்கிய நிதி பூச்சியம்

8.யா மெற்றல் 4 மில்லியன் , உரிமை - மென்ரல் லிங்கம் என்று அழைக்கப்படும் சொர்னா லிங்கம்
இறுதி நேரம் வழங்கிய நிதி 10.000 மட்டும்

9. Keel & finch கட்டிடம் 9 இலட்சம்
உரிமை- தவா இளையதம்பி , ரெஜி , தட்சனாமூர்த்தி , ரெஜியின் மனைவியின் உறவினரான சிங்களவர்
இறுதி நேரம் வழங்கிய நிதி பூச்சியம்

இவைகள் அனைத்தும் இன்று அண்ணன் வந்தால் கொடுப்போம் என்று கொள்ளையடிக்கப்பட்ட விபரங்கள் மட்டும் தொடரும்...

இறுதிக்கட்ட நிதியை KP யின் உத்தரவின் பேரில் கையழிக்கப்பட்ட 5 பேரில் ஒருவரான " மணியோடர் " என்று அழைக்கப்படும் ராஐகுருவின் வாக்குமூல அடிப்படையில் இத்தரவுகள் பெறப்பட்டன .

இதற்கான audio ஆதாரம் எம்மிடம் உள்ளது. மற்றைய 4 வரின் பெயர் , சொத்துவிபரங்கள் விரைவில் ஆதாரங்களுடன் .

விழிப்புக்குழு - கனடா
11-1-2019

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com