Wednesday, January 16, 2019

பொது மக்களை ஏமாற்றிவரும் சிலர், மின்சார நாற்காலியில் அமரப் பார்க்கின்றனர் - கபீர் ஹாசிம்.

பொது மக்களை ஏமாற்றி மின்சார நாற்காலியில் அமர்வதற்கான முயற்சிகளை சில மோசடிக்காரர்கள் மேற்கொண்டு வருவதாக, அமைச்சர் கபீர் ஹாசிம் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கான நோக்கம் கொண்ட இந்த மோசடிக்காரர்கள் குறித்து, மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாவனெல்ல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே, அமைச்சர் கபீர் ஹாசிம் இதனை தெரிவித்தார்.

எனினும் ஆட்சிக்கு வருவதற்காக, பல சூழ்ச்சிகளை மேற்கொள்ளும் நபர்களிடம் இருந்து மக்களை பாதுகாக்கும் பொறுப்பு எம்மிடம் உள்ளதாக கூறிய அவர், மோசடி மற்றும் பல்வேறு குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு, இந்த அரசாங்கம் ஒருபோதும் நியமனங்களை வழங்க அனுமதிக்காது என அமைச்சர் கபீர் ஹாசிம் கூறியுள்ளார்.

அத்துடன் மின்சார நாற்காலியில் அமர்வதற்காக கடந்த காலத்தில் ஒரு தனிநபர், தமக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு மக்களை அறிவுறுத்தியதாக தெரிவித்த கபீர் ஹாசிம்,
ஆனால் அது பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து, தோற்கடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

எனினும் அதே தனி நபர் தற்போது, மோசடி செய்தவர்களுக்கும், ஊழல் செய்தவர்களுக்கும் ஆதரவாக மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறார்.

எனவே இவ்வாறான மோசடிக்காரர்கள் குறித்து, மக்கள் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும். அத்துடன் அடுத்த தேர்தலை மக்கள் சரியாக கையாள வேண்டும் என, அமைச்சர் கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com