Wednesday, January 16, 2019

வட மாகாணத்தை மீண்டும் கல்வியில், சிறந்த மாகாணமாக உருவாக்குவேன் - சுரேன் ராகவன்.

வட மாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்து விளங்கும் மாகாணமாக தாம் உருவாக்குவதாகாக, வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணம் கல்வியில் அதியுச்ச பெறுபேறுகளை வழங்கக் கூடிய மாகாணம் என்பது எல்லோருக்கும் தெரியும். எனினும் அந்த பெறுபேறுகளில் தற்போது சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே வட மாகாணத்தை மீண்டும் கல்வியில் சிறந்த மாகாணமாக உருவாக்க தாம் தயாராக உள்ளதாக, வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் தின விசேட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இவ்வாறு கூறினார்.

எதிர்வரும் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், வட மாகாணத்திலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 50 வீதமாக அதிகரிப்பதற்கு, தாம் எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தாம் தயாராகி வருவதாக கூறிய வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், விரைவில் வட மாகாணத்தின் கல்வியில் பாரிய முன்னேற்றகரமான மாற்றம் ஏற்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com