Tuesday, January 15, 2019

மொழி பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக, விசேட குழுவொன்று நியமனம் - ஆளுநர் சுரேன் ராகவன்.

வடக்கு மாகாணத்தில் நிலவும் மொழி பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐவரடங்கிய குறித்த விசேட குழுவுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆங்கிலத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் தலைமை தாங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவை, அண்மையில் வட மாகாண ஆளுநராக பதவியேற்றுக் கொண்ட சுரேன் ராகவன் நியமித்துள்ளார். அரச நிறுவனங்களில் காணப்படும் மொழிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொருட்டு வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவானால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதிக்கு முன்னர் வடக்கு மாகாணத்தின் சகல அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களில் மும்மொழிக் கொள்கையினை சரியான முறையில் அமுல்படுத்த வேண்டுமென்று வடக்கு மாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைவாக, இந்த குழு தமது பணிகளை மேற்கொள்ளும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்குழுவின் உறுப்பினர்களாக பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் முன்னாள் அதிபர் எஸ்.பத்மநாதன், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் பிரதி அதிபர் எஸ்.லலீஸன், யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் அதிபர் திரு மொஹைதீன் ஹனி சேகு ராயீத், வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி சுதர்ஷி பெர்னாண்டோ ஹப்புகொட்டுவ ஆகியோர் நியமிக்கப்பட்டுன்னர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com