Friday, January 18, 2019

ரணிலும் மைத்திரியும் வேண்டும்! சுமந்திரன் வேண்டாம்! யாழில் குதிரைப்படை அட்டகாசம்.

கம்பெரலிய என்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுடாக வட கிழக்கிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. வடகிழக்கில் இத்திட்டத்திற்கான ஆலோசனைகளையும் சிபார்சுகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து அரசு பெற்றுக்கொள்கின்றது.

அதன் அடிப்படையில் யாழ்பாணத்தில் நீதிமன்ற வீதி மற்றும் கொட்டடி பிள்ளையார் ஆலய கேணி புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன. இவை பா.உ சுமந்திரனின் சிபார்சின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக அறிய முடிகின்றது.

புனரமைப்பு செய்யப்பட்ட பாதைகள் திறந்து வைக்கப்பட்டபோது அதன் பெயர்ப்பலகையில் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சுமந்திரனின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்டிருந்தது.

குறித்த பெயர் பலகை நேற்று இரவு வண்ணம் பூசி சேதப்படுத்தப்பட்டுள்ளது. சேதப்படுத்தியவர்கள் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரியை விட்டு சுமந்திரனையே சேதப்படுத்தியுள்ளனர். அதன் பொருள் மைத்திரியும் ரணிலும் யாழ்பாணச் சந்தியில் குந்தியிருக்கலாம், ஆனால் சுமந்திரன் குந்த முடியாது என்பதாகும்.

இவ்விடயத்தை செய்தியாக வெளியிட்ட ஊடகங்கள் தங்களது வழமையான பாணியில் இனம்தெரியாத நபர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் அது ஒன்றும் இனம் தெரியாதவர்கள் அல்ல. அவர்கள் நேரடியாக மோத திராணியற்ற குதிரை கொம்பனியை சேர்ந்தவர்கள் என்று இலங்கைநெட் நம்பகமாக அறிகின்றது.

யாழ்பாணத்தில் சுமந்திரனின் இருக்கை குதிரைக் கொம்பனிக்கு மாத்திரமல்ல சிறிதரன் கொம்பனிக்கும் பெரும் சங்கடத்தையே கொடுத்துக்கொண்டிருக்கின்றது என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com