Friday, January 18, 2019

எதிர்கட்சித் தலைவர் காரியாலயத்தை பொறுப்பெடுத்த மஹிந்தர் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை சம்பந்தருக்கு விட்டுக்கொடுத்தார்.

எதிர்கட்சித் தலைவராக இன்று காலை மஹிந்த ராஜபக்ச அவர்கள் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் அவர் தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

எதிர் கட்சி தலைவர் பதவி அதன் காரியாலயம் போன்றவற்றில் நிலவி வந்த பிணக்கு இன்றுடன் முடிவடைந்துள்ளது. எதிர்கட்சி தலைவருக்கான காரியாலயத்தை பெற்றுக்கொண்டபோதும், உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனுக்கு விட்டுக்கொடுத்துள்ளார்.

இது தொடர்பில் தனது கட்சி முக்கியஸ்தர்களுடன் பேசும்போது, சம்பந்தன் இந்நாட்டின் மூத்த அரசியல்வாதி மாத்திரம் அல்ல வயதிலும் மூத்தவராவார். அவர் இதற்கு முன்னர் இருந்த வீட்டில் படிகளில் ஏறுவது உட்பட பல சிரமங்களை அனுபவித்து வந்த நிலையிலேயே குறித்த வாசஸ்தலத்திற்கு நுழைந்திருந்தார். இவ்வாறான சூழ்நிலையில் அதை என்னால் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாது. அவர் அந்த வீட்டில் இருக்கட்டும் என்றும் அது தொடர்பாக கேள்விகளை எழுப்பி சம்பந்தனை நோகடிக்க வேண்டாம் என்றும் தனது சகாக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக அவ்வட்டாரங்களிலிருந்து அறிய முடிகின்றது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com