Thursday, January 24, 2019

அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க, நடவடிக்கை - அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல .

அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இன்று கூடிய பாராளுமன்ற அமர்வின் போதே,க்ஷ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்தார்

சுமார் 12 வருடங்களுக்கு பின்னர் அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லை. எனினும் தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்ட போதும் மேலதிக கொடுப்பனவு அதிகரிக்கப்பட வில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து அரச ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு தாம் சிறந்த முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல உறுதியளித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com