Tuesday, January 29, 2019

கூட்டு களவானிகளுடன் இணைந்து, பிரதமர் செய்யப்பட்டமை, மிகப்பெரும் தவறு- சீறினார் மனோ கணேசன்.

பெருந்தோட்ட மக்கள் எதிர்த்த கூட்டு ஒப்பந்தக் களவானிகளுடன் இணைந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்பட்டுள்ளமை, மிகப் பெரிய தவறு என, அரச கருமை மொழிகள், மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இறக்குவானை பகுதியில் இன்று இடம்பெற்ற பாடசாலை நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை கூறினார்.

அரசாங்கத்தைப் பாதுகாத்த எங்களை கேளாமல், பிரதமர் அவ்வாறு நடந்திருக்க கூடாது என்றும், பிரதமரின் இந்த செயல்பாட்டிற்கு தமது தரப்பு கடுமையான எதிர்ப்பை தெரிவிப்பதாகவும், அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கூட்டு ஒப்பந்தம் குறித்த உடன்படிக்கை, நேற்று அலறி மாளிகையில் வைத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கைச்சாத்திடப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும், பல போராட்டங்கள் வெடித்தன.

இவ்வாறு மக்கள் விரும்பாத, அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ள கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட, பெருந்தோட்ட தொழிற்சங்கங்களுக்கு, பிரதமர் அனுமதி வழங்கியிருக்க கூடாது.

அத்துடன் அரசின் பங்காளி கட்சியான, தமிழ் தேசிய கூட்டமைப்பிடமும் இது குறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல் மேற்கொள்ளவில்லை.

இந்த செயல்பாடு மாபெரும் தவறு என சுட்டிக்காட்டிய மனோ கணேசன், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க மீதும், தமது கண்டனத்தை வெளியிட்டார்.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ஆரம்பத்தில் இருந்தே, பெருந்தோட்ட மக்களைத் தவிர்த்து, கம்பனிகளின் நலனுக்காகவே செயல்பட்டு வந்துள்ளார்.

இப்போது அமைச்சர் நவீன் திஸாநாயக்க பெருந்தோட்ட மக்களை ஏமாற்றியதுடன், கம்பெனிகளுக்கு பெரும் உதவி செய்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com