Tuesday, January 29, 2019

கடற்படையிடமிருந்து தப்புவதற்காக கடலில் குதித்த இரு மண்கொள்ளையர்கள் ! கிண்ணியாவில் பதட்டம்.

திருமலை கிண்ணியா கங்கைப்பாலம் பகுதியில் மண்கொள்ளை தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றது. இதனை தடுப்பதற்கான முயற்சிகள் பல்வேறு இடம்பெறுகின்றபோதும், அரசியல்வாதிகள் மற்றும் பலம்பொருந்தியோரின் தலையீட்டினால் இவை சாத்தியமற்றுப்போகின்றது என்பது யாவரும் அறிந்த விடயம்.

இந்நிலையில் இன்று குறித்த பிரதேசத்தில் மண்கொள்ளை கும்பல் ஒன்று மண் அகழ்வில் ஈடுபடுகின்றது என கடற்படையினருக்கு தகவல்கிடைத்ததை தொடர்ந்து படையினர் அங்கு விரைந்தபோது, கைதிலிருந்து தப்புவதற்காக மூன்று மண்கொள்ளையர்கள் கடலில் குதித்துள்ளனர். அவர்களில் ஒருவர் கரையொதுங்கியுள்ளபோதும் இருவர் கடலில் மூழ்கியிருக்கலாம் என்ற சந்தேத்தில் தேடுதல் தொடர்வதாக தெரியவருகின்றது.

இதே நேரம் இச்சம்பவத்தை தொடர்ந்து பிரதேசத்தில் ஒருவகை பதட்ட நிலை உருவாகியுள்ளதுடன் கடற்படையினுக்கும் மண்கொள்ளைக்காரர்களின் உறவினர்களுக்குமிடையே முறுகல் நிலை தோண்றியுள்ளது. இந்நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் ஸ்தலத்தில் குவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

மோசடிப்பேர்வழிகளையும் கொள்ளையர்களையும் கட்டுப்படுத்தும் கடமைகளை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவேண்டியவர்கள் செய்கின்றபோது, பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடையூறு விளைவிக்கின்ற செயற்பாடுகள் மிகவும் கண்டனத்திற்குரியதாகும். பொதுமக்களின் பொறுப்புணர்சியற்ற இச்செயற்பாடுகளினூடாகவே இலங்கையில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துச் செல்கின்றது.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com