Thursday, January 31, 2019

நாட்டின் அரசியல் கொள்கை அடிக்கடி மாற்றமடைவது கவலைக்குரியது - சபாநாயகர்

புதிதாகப் பிறக்கும் சந்ததிகளும் தவறான அரசியல் கொள்கை மற்றும் அரசியல் தீர்வுகளின் பாதிப்புக்களைச் சந்திக்க நேர்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய ஆதங்கம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற இலங்கை தேசிய வர்த்தக சபையின் 60 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போது சபாநாயர் மேற்படி தெரிவித்தார்.

சரியான தொலைநோக்குடன் நாட்டைச் சரியான பாதையில் இட்டுச் செல்லவேண்டிய காலம், தோன்றியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் அரசியல் கொள்கை அடிக்கடி மாற்றமடைவது கவலைக்குரிய விடயமாகும்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் ஒரு பொதுவான இணக்கப்பாடு எங்களிடம் இல்லை என்றும் சபாநாயகர் இதன்போது கூறினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன, நாட்டின் பூகோள அமைவையும், மனித வளங்களையும் சரியாக இனங்கண்டு செயற்படுவது பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமாகும் என குறிப்பிட்டார். அரசியல் கொள்கைகளை வகுக்கும் போது மனித வளங்களை மேம்படுத்துவதற்கான முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்றும் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன இதன் போது வலியுறுத்தினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com