Sunday, January 6, 2019

மஹிந்தவின் ஆஸ்தான ஜோதிடருக்கு, மிஹின்லங்கா பணத்தில் கார் கொடுக்கப்பட்டதா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில், மிஹின்லங்கா விமான நிலையத்தின் பணம் முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமது ஆஸ்தான ஜோதிடர் சுமணதாஸ அபேகுணவர்தனவிற்கு, மிஹின்லங்கா விமான நிலையத்தின் பணத்திலிருந்து ஒரு காரை கொள்வனவு செய்து பரிசளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மிஹின்லங்கா நிறுவனத்திற்கு 8 . 2 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான நிலையம் மற்றும் மிஹின்லங்கா விமான நிலையம் மூலமாக பண மோசடிகள் இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து, ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த விசாரணைகளின் போதே, இந்த விடயம் தெரியவந்துள்ளது. அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது ஆட்சி காலத்தில் சுமார் 26 கார்களை கொள்வனவு செய்ததாகவும் அதற்கான நிதியை, மிஹின்லங்கா நிறுவனமே வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com