Tuesday, January 8, 2019

பவ்ரல் அமைப்பு பிரதமருக்கு விடுத்த கோரிக்கை எது தொடர்பில்?

மாகாணசபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கவேண்டும் என பவ்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி நேற்று பிரதமருக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எல்லை நிர்ணய மீளாய்வு அறிக்கையினை ஜனாதிபதியிடம் விரைவாக சமர்ப்பித்து, பிரதமர் என்ற ரீதியில் மாகாணசபை தேர்தலை விரைவுப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஜனநாயகத்தை மதிக்கும் அரசாங்கம் என்ற அடிப்படையில் மக்களின் தேர்தல் உரிமைகளுக்கு நாட்டினது தலைவர் என்ற வகையில் வாய்ப்பளிக்க வேண்டும்.

தற்போது நாட்டை ஆளுகின்ற பொறுப்புவாய்ந்த தலைவர்கள் என்ற வகையில் ஜனாதிபதியும் பிரதமரும் பொறுப்புக் கூறவேண்டியதுடன், மக்களது தேர்தல் உரிமைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com