Tuesday, January 8, 2019

ரம்புட்டான் தொடர்பில் விவசாய அமைச்சு எடுத்த முடிவு

விவசாயத் திணைக்களத்தின் பழக்கிராம திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ரம்புட்டான் செய்கை மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க விவசாயத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்கீழ், மலேஷியன் மஞ்சள் மற்றும் சிவப்பு ரம்புட்டான், மல்வானை ரம்புட்டான் உள்ளிட்ட ரம்புட்டான் வகைகளின் செய்கை விஸ்தரிக்கப்படவுள்ளது. இதனால் ரம்புட்டான் செய்கையில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் நன்மை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, ஒரு ரம்புட்டான் மரம் நடப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குள் பலனை தர ஆரம்பித்துவிடும். ரம்புட்டான் பழம் முழுமையாக பழுப்பதற்கு 90 முதல் 120 நாட்கள் வரை எடுத்துக் கொள்கின்றது. ரம்புட்டான் மரம் ஒன்று பருவத்திற்கு 80 கிலோ முதல் 200 வரையிலான காய்களை தரும். பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் ரம்புட்டான் மரத்தில் அதிகம் ஏற்படுவதில்லை .இருப்பினும் மிக குறைந்த அளவிலே இம்மரத்தின் கிளைகளிலும் காம்புகளினும் பூஞ்ச காளான் நோய் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com