Saturday, January 12, 2019

நீதிபதி களு ஆராச்சி திடீர் விலகல்

ராடா நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களு ஆராச்சி நேற்றையதினம் அறிவித்துள்ளார்.

ராடா நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டில் டிரான் அலஸ் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இதுவரையில் தனது முன்னிலையில் நடைபெற்றதாகவும், எனினும் சாட்சி விசாரணைகளின் போது வௌியாகிய பல விடயங்கள் காரணமாக, தான் இந்த வழக்கு விசாரணைகளில் இருந்து தனிப்பட்ட ரீதியில் விலகுவதாகவும் மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களு ஆராச்சி அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை கொழும்பு, இலக்கம் – 05 மேல்நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சியின் முன்னிலையில் முன்னெடுக்குமாறும் நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த மாதம் 29 ஆம் திகதி வழக்கு விசாரணை நடத்தப்படும் என மேல்நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி அறிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com