Friday, January 18, 2019

இனிமேல் பயங்கரவாதிகளை நினைவுகூர மாட்டோம்! பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு எழுத்தில் கொடுத்தார் இன்பராசா.

புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்டதோர் பயங்கரவாத அமைப்பு. அந்த அமைப்பு தொடர்பில் பிரச்சாரம் மேற்கொள்வது, அதன் உறுப்பினராக இருப்பது, அவ்வியக்கம் சார்பாக செயல்படுவது யாவும் பயங்கராத தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத நடவடிக்கையாக கணிக்கப்படுவதுடன் பாரிய தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

இந்நிலையில் நல்லாட்சி என்று கூறப்பட்ட அரசிற்கு வாக்களித்து மஹிந்தவின் அரசை கவிழ்க உதவியமைக்காக கடந்த நான்கு வருடங்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் சற்று பின் நின்றது.

அச்சமயங்களில் புலிகளின் மா வீரர் நாள் என்று கூறப்படுகின்ற நிகழ்வு உட்பட புலிகளின் சில நிகழ்வுகள் கடந்த 4 ஆண்டுகள் வடகிழக்கில் இடம்பெற்றது யாவரும் அறிந்த விடயம்.

இவ்விடயங்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வருகின்றது. பொலிஸார் ஓரளவு சுயாதீனமாக இயங்க ஆரம்பித்துள்ள நிலையில் அவர்கள் இனிவரும் காலங்களில் இவ்வாறான விடயங்களில் அரசியல் விருப்பு வெறுப்புக்களுக்கு இடம்கொடாது பயங்கரவாத சட்டத்தினை நடைமுறைப்படுத்துவார்கள் என அத்திணைக்களத்தின் உயர் மட்ட வாட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

ஆந்த வகையில் பயங்கரவாத அமைப்பான புலிகள் அமைப்பின் நினைவேந்தல் நிகழ்வு எதனையும் நடத்தக் கூடாது என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சிக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிசார் (ரிஐடி) எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எழுத்துமூலமாக இந்த எச்சரிக்கை தமக்கு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் என்.இன்பராசா தெரிவித்துள்ளார். எனவே இவ்வாறான நிகழ்வுகளை இனி நடத்தமாட்டோம் என்றும் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசும்போதே இதனை தெரிவித்துள்ளார்.

'பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இரண்டு நாட்களின் முன்னர் என்னை விசாரணைக்கு அழைத்தனர். சாதாரண விசாரணை என்று நினைத்துத்தான் அங்கு சென்றேன். காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 2.30 மணிவரை விசாரணை நடத்தப்பட்டது.

யூலை 5ம் திகதி நெல்லியடியில் கரும்புலி நாள் நினைவுகூரப்பட்டதை பற்றி விசாரித்தார்கள். அதை நடத்த அனுமதி தந்தது யார் என விசாரித்தார்கள்.

இப்படியான நிகழ்வுகளை இனி நடத்தமாட்டோம் என கையொப்பமிட்டு தருமாறு கேட்டனர். அவர்கள் கேட்டதை போல, எழுத்துமூலமாக எழுதி கொடுத்துள்ளோம். அதனால், இனிமேல் விடுதலைப்புலிகள் தொடர்பான நிகழ்வுகளை நடத்த முடியாது;' என்றார்.

விடுதலைப்புலிகளின் நிகழ்வுகளை பலரும் நடத்தி வரும்போது தமக்கு மட்டும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com