Wednesday, January 30, 2019

கடற்படையினருக்கு பயந்து நீரில் குதித்த மண் கொள்ளையர்களின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டது.

சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்களை மடக்கும் நோக்கில் கடற்படையினர் சென்றபோது நேற்று நீரில் குதித்த இருவர் காணமல் போயிருந்தனர். இவர்கள் இருவரம் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போனவரை தேடும் பணியில், விசேட அதிரடிப் படையினரும் பிரதேச மக்களும் இணைந்து நேற்றிரவு முதல் ஈடுபட்ட நிலையிலேயே, கிண்ணியா பகுதியில் வைத்து, குறித்த இளைஞரின் உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் தற்போது கிண்ணியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த சிலரைக் கண்ட கடற்படையினர், நேற்று பகல் வான் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதன்போது துப்பாக்கி சூட்டின் அச்சத்தில் மூவர் தப்பியோடினர். அப்போது ஒரு இளைஞனை கடற்படையினர் மடக்கிப் பிடித்தனர். இருவர் கடலில் குதித்த நிலையில், ஒருவரின் சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டிருந்தது.

இந்த சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர், இதுவரை கைது செய்யபட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் போது குறித்த பிரதேசத்தில் இருந்த மக்கள், கடற்படையினரை நோக்கி, கல்வீச்சுத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறு கல்வீச்சுத் தாக்குதலால் காயமடைந்த 12 கடற்படையினர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை திருகோணமலை – கிண்ணியா பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலைய அடுத்து, அங்கு விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினருடன், பொதுமக்கள் மோதலில் ஈடுபட்டதால் அங்கு தீவிர நிலை ஏற்பட்டது.

இதேவேளை, பொதுமக்களின் கல்வீச்சில் காயமடைந்த 12 கடற்படையினர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com