Wednesday, January 30, 2019

அரசாங்கத்தை, அரச தரப்பே எதிர்க்கும் அவலம் - பலம் பெற்று வரும் எதிரணி.

தற்போது அரசாங்கத்தை, அரச தரப்பிலுள்ளவர்களே எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்தானத்தை அடுத்து, இந்த நிலைமை தீவிரமாகியுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலனை சீர்குலைக்கும் கூட்டு ஒப்பந்தத்தை ஒழிக்க வேண்டும் என, தேசிய ஒருமைப்பாடு,அரச கருமை மொழிகள்,இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குவானை பரியோவான் கல்லூரியில் இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மனோ கணேசன், இதனை கூறினார்.

இதேவேளை கூட்டு ஒப்பந்தம் மூலமாக, பெருந்தோட்ட மக்களுக்கு மீண்டும் ஒருமுறை துரோகம் இழைக்கப்பட்டு விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் குறிப்பிட்டுள்ளார்.

மக்களை பாதித்துள்ள இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அரசாங்கம், ஒருபோதும் அனுமதித்திருக்க கூடாது என அவர் கூறினார்.

அத்துடன் இப்போதைய அரசாங்கத்தில் தொடர்வதா? அல்லது விலகுவதா? என்பது குறித்து, தமது தரப்பு கலந்துரையாடவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் அரசியல் பீடம் கூடும் போது, இது குறித்து தீர்மானிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.

இதனிடையே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை நியாயமாக வழங்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தோட்ட நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகக் கூறுவது பொய்யான விடயமாகும். குறித்த நிறுவனங்களுக்கு போதிய இலாபம் கிடைக்கின்றது.

இதனை அவர்கள் மறைத்து பொய்யான கணக்குகளைக் காண்பித்து தொடர்ந்தும் தோட்ட மக்களை அந்த நிறுவனங்கள் தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர்.

தோட்டத்தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பான விடயம் நாட்டில் சில குழப்பங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசங்கத்தில் இணைந்துள்ள சில தமிழ்க் கட்சிகளும் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், ஆயிரம் ரூபாய் சம்பள கோரிக்கை நியாயமானது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 1000 ரூபாவை வழங்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்” என லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com