சேனா படைப்புழுவின் ஆரம்பம் அம்பாறையே - நிமல் விக்ரமசிங்க.
கடந்த தினங்களில் நாட்டின் பல மாவட்டங்களின் பயர்நிலங்களை குறிவைத்து தாக்கிய சேனா படைப்புழு, முதன் முதலாக அம்பாறை மாவட்டத்திலேயே அவதானிக்கப்பட்டதாக, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நிமல் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் சேனா படைப்புழுவின் தாக்கம், கடந்த வருடம் ஒக்டோபர் மாதமளவில் அவதானிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், டிசம்பர் மாதத்திலேயே அது பரவும் நிலையை அடைந்ததாக கூறினார்.
இந்த சேனா படைப்புழுவால் தற்போது 48 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள சோளப்பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பயிர்களை விட சோளப் பயிர் செய்கையே இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னயை வருடங்களை விட இம்முறை சோளம் கூடுதலாக பயிரிடப்பட்டிருந்ததாக அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நிமல் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
அத்துடன் சேனா படைப்புழுவின் விரும்பிய உணவாக, சோளம் கருதப்படுகின்றது. இதனால் அதன் பரவலும் வேகமாக இடம்பெறுய்வதாக நிமல் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment