Monday, January 7, 2019

இலங்கையின் முக்கிய வேலை ஒன்றை முன்னெடுக்கும் இந்தியக் கப்பல்

நாட்டின் கடல் எல்லை வரைபடத்தைத் தயாரிக்கும் கூட்டு நடவடிக்கையை இலங்கை இந்தியா இணைந்து முன்னெடுத்து வருகின்றன.

இதற்காக இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பலொன்று இலங்கைக்கு வந்துள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. இலங்கையின் கடல் எல்லை வரைபடத்தைத் தயாரிக்கும் கூட்டு நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக கடந்த 20ஆம் திகதி, கொழும்பு துறைமுகத்தை இந்திய கடற்படைக்குச் சொந்தமான யமுனா கப்பல் வந்தடைந்தது. இதன் தொடர்சியாக கொழும்பிலிருந்து காலி வரையான கடற்பரப்பில் அளவீட்டு நடவடிக்கைகளில் சுமார் 15 நாட்களாக இந்தக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டது.

இந்திய கடற்படையின் இந்தக் கப்பலின் சிறப்பு என்னவென்றால், ஆழமான கடற்பரப்புக்களில் வரைபட தயாரிப்பை முன்னெடுக்கும் தொழில்நுட்பத்தை கொண்டு இருப்பதே. இந்த இந்தியக் கப்பல் நாளை முதல் இரண்டு வார காலப்பகுதியின் தென்பகுதி கடற்பரப்பில் வரைபட தயாரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, கடற்படை ஊடகப்பேச்சாளர் இசுர சூரியபண்டார தெரிவித்தார். கடற்படையின் குழுவொன்றில் இந்த நடவடிக்கையில் இணையவுள்ளதுடன், பெப்ரவரி மாதத்தில் இந்தக் கப்பல் நாட்டிலிருந்து வௌியேறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com