Tuesday, January 15, 2019

இந்த வருடத்திற்கான ஹஜ் கோட்டாவில் அதிகரிப்பு

கடந்த வருத்திலும் பார்க்க இவ்வருடத்துக்கான ஹஜ் கோட்டாவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம். எச்.ஏ.ஹலீமுக்கும் சவுதி அரசாங்கத்தின் ஹஜ் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் உள்ளிட்ட குழுவுவினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பின் பயனாக இம்முறை இலங்கைக்கு வழங்கப்படும் ஹஜ் கோட்டாவை 3500 ஆக அதிகரிக்க சவுதி அரசு தீர்மானித்துள்ளதாக, தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார். இதற்கு முன்னைய வருடங்களில் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற ஹஜ் கோட்டாவின் தொகை 3000 க்கு அண்மித்த தொகையாகக் காணப்பட்டநிலையில், இந்த வருடம் இந்த அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com