Tuesday, January 15, 2019

வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு, 30 தடவைகள் பிரயோகிக்கப்பட்டதாக காவல்துறை அறிவிப்பு

வத்தளை ஹேகித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் 30 தடவைகள் பிரயோகிக்கப்பட்டதாக, காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

பும்பா மற்றும் குடு செல்லி ஆகிய இரு பாதாள உலக குழுக்களுக்கு இடையில் இந்த துப்பாக்கி சூட்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த தினம் வத்தளை ஹேகித்த பகுதியில் காரொன்றில் பயணித்துக் கொண்டிருந்த பாதாள குழு ஒன்றை நோக்கி பிறிதொரு காரில் வந்த பாதாள உலக குழுவினர், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர் . இந்த தாக்குதலுக்காக, ரீ 56 ரக துப்பாக்கிகள் இரண்டு பயன்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த இரு பாதாள குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே இந்த தாக்குதல் இடம்பற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டில் இருவர் பலியாகினர். சம்பவத்தில் பலியானவர்கள் கொழும்பு பகுதியைச் 31 மற்றும் 38 வயதானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்காக வத்தளை காவத்துறை, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் மேல்மாகாணத்தின் வடக்கு பிராந்தியத்திற்கான குற்றவியல் பிரிவு என்பன ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக தெரிவித்த விசாரணைக்கு குழுவினர், குற்றவாளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com