Wednesday, January 16, 2019

புதிய அரசியலமைப்பு நாட்டை ஐக்கியப்படுத்தும் - தயா கமகே

நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் ஒப்பந்தங்களில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் கையெழுத்திடவில்லை என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்மொழியப்பட்ட விடயங்களை எதிர்தரப்பினர் திசை திருப்ப முயற்சி செய்கின்றனர். எதிர்க்கட்சியினர் அவர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்காக இனவாதத்தை தூண்டிவிடும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்தரப்பினர் கூறுவதைப்போன்று நாட்டிற்கோ, மக்களுக்கோ தீங்கு விளைவிக்கும் அல்லது நாட்டை பிளவுபடுத்தும் எந்த ஒப்பந்தங்களிலும் அரசாங்ககம் கையெழுத்திடவில்லை. புதிய அரசியலமைப்பானது நாட்டை ஐக்கியபடுத்தும் முயற்சியாக கொண்டுவரப்படுகின்றது. ஆனால் இது நாட்டை பிளவுபடுத்தும் என்று வதந்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில் அவர்கள் முன்வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுப்பதாக தெரிவித்த அமைச்சர் தயா கமகே, சில குழுக்கள் இனவாதத்தை தூண்ட முற்படுகின்றன என்றும் குற்றம்சாட்டினார். அத்தகைய குழுக்கள், பெரும்பான்மை மக்களுக்கிடையில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளிலும் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com