Saturday, January 5, 2019

கள்ள மண் ஏற்றிய பிரதேச சபை வாகனமும் சாரதியும் பொலிஸ் கூண்டில்..

மஹியங்கணை பிரதேசத்தில் சட்டவிரோமாக மணல் தோண்டி விற்கும் வியாபாரத்திற்கு பிரதேச சபை வாகனம் பயன்படுத்தப்பட்டமை கையும் களவுமாக மாட்டியுள்ளது.

பிரதேச சபை தவிசாளரின் உத்தரவின் பேரில் இடம்பெற்றுவந்த சட்ட விரோத செயற்பாட்டை முறியடித்த பொலிஸார் குறித்த வாகனத்தை சாரதியுடன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

வாகனம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டபோது, அவ்வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோதும், பொலிஸார் கடமையை நிறைவேற்றியுள்ளனர் என தெரியவருகின்றது.

மேற்படி பிரதேச சபை தவிசாளரால் இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் சட்டமும் ஒழுங்கும் மீறப்பட்டு சட்ட விரோத வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com