5000 ரூபா இலஞ்சம் - கான்ஸ்டபிளுக்கு 4 வருட சிறை
கொகலெல்ல பொலிஸில் நிலையத்தில் பணியாற்றிய கான்ஸ்டபிளுக்கு 5000 ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றத்திற்காக, இன்று நான்கு வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி வினிசுரு விக்ரம ஆரச்சி முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 4 வருட சிறைத் தண்டனை என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் 2011 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி இவர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த கான்ஸ்டபிள், பொலீஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு அவரிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டமை காரணமாகவே, இவர் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்டார். இந்த நிலையில் சுமார் 8 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வந்த வழக்கு இன்று முடிவுக்கு வந்து தீர்ப்பளிக்கப்பட்டது. அத்துடன் குற்றம் இழைத்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நீதிமன்றம்12,000 ரூபா அபராதமும் விதித்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment