Monday, January 21, 2019

ஜிந்துப்பிட்டி துப்பாக்கி சூட்டு விசாரணைக்கு 4 பொலிஸ் குழுக்கள் நியமனம்

நேற்று மாலை ஜிந்துப்பிட்டியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, ஜிந்துப்பிட்டியில் நேற்று மாலை 6.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இரண்டு பேர் முச்சக்கரவண்டியில் பயணித்து கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் கொழும்பு 13 ஐச் ​சேர்ந்த 32 வயதான ஒருவர் காயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பில் விசாரிக்க 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com