Monday, January 21, 2019

முல்லைத்தீவில் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிரசேன இன்று முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனையை தடுக்கும் தேசிய திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு விஜயமாகிறார். இன்று முதல் எதிர்வரும் 28 அம் திகதி வரை போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பாடசாலைகளில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்நோக்கம், போதைப் பாவனையினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தௌிவுப்படுத்துவதே என்று ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் டொக்டர் சமன்த கிதலவஆராச்சி குறிப்பிட்டார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com