Thursday, January 3, 2019

2019 -ம் ஆண்டின் பாதீட்டு அறிக்கையை மார்ச் 5 -ல் சமர்ப்பிக்க தீர்மானம்

2019 ம் ஆண்டுக்கான பாதீட்டு அறிக்கையை எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

புதிய ஆண்டுக்கான பாதீட்டின் கணக்கு அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக கணக்கு அறிக்கையை எதிர்வரும் 8 ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர தீர்மானித்திருந்த போதும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 4 வது பதவி ஏற்பு நினைவு தினம் எதிர்வரும் 8 ஆம் திகதியாக இருப்பதனால் அதற்கு முன்னர் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதனிடையே இவ்வருடத்துக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி நிதி அமைச்சரினால் முன்வைக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com