Wednesday, January 16, 2019

கைகலப்பில் பறிபோனது 16 வயது சிறுவனின் உயிர்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் நேற்று மாலை சம்பவித்த தாக்குதல் சம்பவம் ஒன்றில் 16 வயதான சிறுவன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கூறிய ஆயுதம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மீராவோடை கிராமத்தைச் சேர்ந்த சனூஸ் முஹம்மத் ஸக்கீல் என்ற சிறுவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில், கூரிய ஆயுதமொன்றினால் குத்தப்பட்டதில் மேற்படி சிறுவன் உயிரிழந்துள்ளார். கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்து சிறுவனை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடாத்திவரும் பொலிஸார் சம்வத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு இளைஞனைத் தேடி வருவதாகத் தெரிவித்தனர். கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com